ஆய்வு மரபு.
பிறருடைய ஆய்வுத் திறன் காணும்பொழுதில் பாராட்டும் மனப்பான்மை இருக்க வேண்டும்.
தம்மில் சிறிய பதவியுடையவரிடமும் ஆய்வுத் திறன் வெளிப்படுத்தும் திறனிருப்பின் போற்ற வேண்டும்.
ஆய்வுத் திறமையைப் பாராட்ட மறுப்பதும் தவறு ஆகும்.
ஆய்வு நாட்டம் இலாதவரை பட்டம் கருதி வானளாவப் புகழ்வது பெருந்தவறு.
இக்குறைகளை நீக்குவதே ஆய்வுப் பண்பாடு ஆகும்.
செய்யக்கூடாத தவறுகள்
பிறர் கருத்தை மேற்கோளாகச் சுட்டலாம்; ஆனால் தம்கருத்துப் போல வெளியிடக் கூடாது.
ஆய்வுத் துறையில் திருட்டு என்பது அறிவுத் திருட்டு எனக் கொள்ளப் பெறும்.
இது மிகுந்த தண்டனை தரப்பட வேண்டியதாகும்.
ஆணவம், மீயுயர் மனப்பான்மை, தற்செருக்கு ஆய்வுக்கு ஆகாததாகும்.
எளிமை, அடக்கம், தற்சார்பின்மை ஆய்வை வளர்க்கும்.
காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றா தாகும்; உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும் (முனைப்பாடியார் அறநெறிச்சாரம் 41)
நடுநிலை சான்ற ஆய்வறத்தைச் சுட்டும் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக